அதிமுக, அமமுக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் 

பேராவூரணியில் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனமான பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் 36 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், அதிமுக சார்பில் பேராவூரணி பயணியர் மாளிகையில் இருந்து தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சி.வி.சேகர் தலைமையில் ஊர்வலமாக வந்து, அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் மாநில விவசாய பிரிவு இணைச் செயலாளர் மா கோவிந்தராசு, மாவட்ட அவைத்தலைவர் எஸ்.வி. திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர்கள் கோவி.இளங்கோ, உ.துரைமாணிக்கம், கே.எஸ். அருணாசலம், நகரச் செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், முன்னாள் கயிறு வாரியத் தலைவர் நீலகண்டன் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக, பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஓபிஎஸ் அணி :

பேராவூரணி ரயிலடி அருகே அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் சிறு உருவப்படத்திற்கு ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட பொருளாளர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஒன்றியச் செயலாளர்கள் சிவ. மதிவாணன் (சேதுபாவாசத்திரம் வடக்கு), ராஜேந்திரன் (தெற்கு), சாமி.செல்லத்துரை (பேராவூரணி வடக்கு), ச.சிவராம சேதுபதி (தெற்கு), முன்னாள் நகரச் செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, கள்ளம்பட்டி செல்வம், நகரச் செயலாளர்கள் வி.என்.பி.அருண் சேரன் (பேராவூரணி), பி.ராமமூர்த்தி (பெருமகளூர்), முன்னாள் ஒன்றியப் பொருளாளர் பைங்கால் அசோக்குமார், மாவட்ட பிரதிநிதி பள்ளத்தூர் மணிகண்டன், பேராவூரணி நகர அவைத் தலைவர் தர்மராஜன், அம்மா பேரவை வி.பாலசுப்பிரமணியன், இளைஞர் அணி ஆர்.வெங்கடேஷன், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கார்கில் வினோத், பேராவூரணி தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் என்.கலைச்செல்வன், வடக்கு ஒன்றியத் தலைவர் எம்.கல்யாணசுந்தரம், தெற்கு ஒன்றியம் எம்ஜிஆர் இளைஞர் அணி ராம்குமார், விவசாயிகள் அணி சவுந்தர்ராஜன், கிளைச் செயலாளர் சண்முகம், அம்மா பேரவை வடக்கு ஒன்றியச் செயலாளர் கோபிநாத், பேராவூரணி நகர நிர்வாகி சண்முக வடிவேல், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமமுக :

பேராவூரணி ரயில் நிலையம் அருகில் அம முக சார்பில் மாநில அமைப்பு செயலாளர் எஸ் கே தேவதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் டி. மணிமாறன் நகரச் செயலாளர் வி கே முத்துவேல் ஒன்றிய செயலாளர் வடக்கு சுப்பிரமணியன் தெற்கு சி பாஸ்கரன் மகளிர் அணி செயலாளர் இளைஞனே பெருமகளூர் நகர செயலாளர் கே கே புகழேந்தி மாவட்ட அம்மா பேரவை முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்தனர்

Tags

Next Story