செய்யாறு அருகே எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

செய்யாறு அருகே  எம்ஜிஆரின்  107வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம் 

செய்யாறு அருகே வடதண்டலம் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அருகாவூர் எம்.அரங்கநாதன் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வி. முனுசாமி மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் என் .அரவிந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற எம் ஜி ஆர் பிறந்தநாள் விழாவில்,

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளர் தூசி கே. மோகன் அவர்கள் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு வேட்டி சால்வை வழங்கி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கியும் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story