ஊத்தங்கரையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

ஊத்தங்கரையில் எம்ஜிஆரின் 107ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம் தலைமையில், நான்குமுனை சந்திப்பில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து, மலா் தூவி இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, ஊத்தங்கரை வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு ஒன்றியச் செயலாளா் வேங்கன், நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் நகர செயலாளா் சிவானந்தம், ஊத்தங்கரை ஒன்றிய அவைத் தலைவா்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி, தொகுதிச் செயலாளா் திருஞானம், முன்னாள் உப்பாரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சாமிநாதன், மாரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஜீவானந்தம் மற்றும் கட்சிக் கிளை நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, எம்ஜிஆரின் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

Tags

Next Story