மிக்ஜாம் புயல்... சென்னைக்கு சென்ற செய்யாறு தூய்மை பணியாளர்கள்

மிக்ஜாம் புயல்... சென்னைக்கு சென்ற செய்யாறு தூய்மை பணியாளர்கள்

 சென்னையில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரி செய்ய செய்யாறில் இருந்து 54 தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

சென்னையில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரி செய்ய செய்யாறில் இருந்து 54 தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் 54 பேர் சென்னையில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தூய்மைப்படுத்த 54 பேர் குழுவாக பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இவர்களுடன் தூய்மை பணிக்கு தேவையான 50 பிளிச்சிங் மூட்டைகள் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் டிராக்டரில் அனுப்பி வைத்தனர். சென்னை குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு தூய்மை பணிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவாஜி ,ரமேஷ் ஆகியோர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags

Next Story