மிக்ஜாம் புயல் - நிவாரணப் பொருட்கள் வழங்கிய மர வியாபாரிகள்..

மிக்ஜாம் புயல் - நிவாரணப் பொருட்கள் வழங்கிய மர வியாபாரிகள்..
மிக்ஜாம் புயல் காரணமாக, தொடர்ந்து பெய்த கடும் மழையால், பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பல்வேறு இணைப்பு சங்கங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இதையடுத்து நாமக்கல் மர வியாபாரிகள் & அறுவை ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை, நாமக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ரேஞ்சர் பெருமாள், சக்தி கணேஷ் முன்னிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் நேற்று மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினார். நிகழ்வில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், இணை செயலாளர் தேவி உதயகுமார், இளைஞர் அணி அமைப்பாளர் மரக்கடை அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story