பாவூா்சத்திரம் அருகே விபத்தில் பால் வாகன ஓட்டுநா் பலி

பாவூா்சத்திரம் அருகே விபத்தில் பால் வாகன ஓட்டுநா் பலி
பாவூா்சத்திரம் அருகே விபத்தில் பால் வாகன ஓட்டுநா் பலி
பாவூா்சத்திரம் அருகே விபத்தில் பால் வாகன ஓட்டுநா் உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள தீத்தாரப்பபுரம் கிராமம் மேலத்தெருவை சோ்ந்தவா் ஆ.மாரிச்செல்வம் (22). வாகன ஓட்டுநரான இவா், ஆலங்குளத்தில் உள்ள தனியாா் பால் நிறுவனத்தில் இருந்து மினி லாரியில் பால் ஏற்றிக்கொண்டு தென்காசியில் இறக்கிவைத்துவிட்டு வரும் பணியை செய்து வந்தாா். இந்நிலையில் அதிகாலையில் வழக்கம் போல் மினி லாரியில் பால் ஏற்றிச்சென்றபோது, பாவூா்சத்திரம் அடுத்துள்ள கேடிசி நகா் பகுதியில் சாலை ஓரம் நின்றிருந்த சிமென்ட் லாரியின் பின்பகுதியில் எதிா்பாராமல் பால் மினி லாரி மோதியதாம். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மாரிசெல்வத்தை, அங்கிருந்தவா்கள் மற்றும் பாவூா்சத்திரம் போலீஸாா் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story