கொள்ளிடம் பாலத்தில் பால் வேன் கவிழ்ந்து விபத்து

கொள்ளிடம் பாலத்தில் பால் வேன் கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் பாலத்தில் நேற்றிரவு பால் வேன் கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்த்தப்பினர்.


திருச்சி மாவட்டம் கொள்ளிடம் பாலத்தில் நேற்றிரவு பால் வேன் கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்த்தப்பினர்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தர் 25 வயதான சுரேஷ்குமார். இவர் வயலூரிலிருந்து மினி பால்வேனில் பால் மற்றும் தயிர் ஏற்றிக்கொண்டு அதிகாலையில் சமயபுரம் நோக்கி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சுரேஷ் மற்றும் அவரது சகோதரர் பிரகாஷ் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்கள். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இந்த விபத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 300 லிட்டர் பால்,100 லிட்டர் தயிர் சாலையில் கொட்டியது.

Tags

Next Story