மினி பேருந்து - இருசக்கர வாகனம் மோதல் : 2 பேர் பலி

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து ஏற்படுத்திய பேருந்தின் மீது இறந்தவரின் உறவினர்கள் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் ஆலம்பாடி மேல தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேலு மகன் கரிகாலன் 45 . விவசாய வேலை பார்த்து வரும் இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் ஆலம்பாடியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வரும் பொழுது, அங்கிருந்த, சேலம், பள்ளப்பட்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம் , சினிமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சோலைராஜா 73, பூமியில் நீரூற்று பார்த்துவரும், இவர் தானும் பெரம்பலூர் வருவதாக கூறி லிப்ட் கேட்டு கரிகாலுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி பெரம்பலூர் நோக்கி வரும்பொழுது, பெரம்பலூரில் இருந்து ஆலம்பாடி நோக்கி சாலையில் வந்த மினி பேருந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த கரிகாலன் மற்றும் சோலைராஜா இருவரும் சம்பவ இடத்திலேயே பலத்த படுகாயத்துடன் உயிரிழந்தனர்.

உடன் தகவல் தெரிந்து சம்பவ இடம் வந்த கரிகாலனின் உறவினர்கள் ஆத்திரமடைந்து மினி பேருந்தை கல்லால் அடித்து பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதில் மினி பேருந்து ஓட்டுநர் மேலப்புலியூரைச் சேர்ந்த வடிவல் மகன் பிரேம் குமார் 27,அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் . தகவலறிந்து சம்பவ இடம் வந்த பெரம்பலூர் போலீசார் உயிரிழந்தவர்களின் இரண்டு பேரின் உடலையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து, விசாரணை மேற்கெண்டு தப்பி ஓடிய மினி பேருந்து ஓட்டுநர் பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story