உளுந்தூர்பேட்டையில் வேன் கவிழ்ந்து விபத்து

உளுந்தூர்பேட்டையில் வேன்  கவிழ்ந்து விபத்து

விபத்துக்குள்ளான வேன் 

உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்தனர்.
சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் கோகுல் அரசு, 34; மினி டெம்போ டிரைவர். செந்தில், 35; இருவரும் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி மினி டெம்போ வேனில் சென்றனர். நேற்று காலை உளுந்துார்பேட்டை அடுத்த ஆர்.ஆர்.குப்பம் அருகே புறவழிச் சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது. இதில், இருவரும் காயமடைந்தனர். உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story