ரூ.814.79 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குரோம்பேட்டையில் 3459 பயனாளிகளுக்கு ரூ.814.79 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறையின் சார்பில் பட்டா வழங்கும் விழாவில் பல்லாவரம், தாம்பரம் மற்றும் வண்டலூர் வட்டங்களை சேர்ந்த 3459 பயனாளிகளுக்கு ரூ.814.79 கோடி மதிப்பீட்டில் பட்டாக்களை திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில், சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன் வழங்கினார் .

Tags

Next Story