பள்ளியில் கண்காட்சி - அமைச்சர் பங்கேற்பு

பள்ளியில் கண்காட்சி - அமைச்சர் பங்கேற்பு
பள்ளியில் கண்காட்சி, அமைச்சர் பங்கேற்பு
செங்கல்பட்டு தனியார் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

செங்கல்பட்டு செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நாணயம், அஞ்சல் தலை, அறிவியல் மற்றும் மருத்துவச் செடிகள் அறிமுகம் என பல்துறை சார்ந்த கண்காட்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து, "மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆசிரியப் பெருமக்கள் அவர்களுக்கான வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும்" என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story