உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பாபநாசத்தில் நான் வெஜ் நாயகன் என்ற புதிய உணவகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மேலரஸ்தா பகுதியில் நான் வெஜ் நாயகன் புதிய உணவகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், மாவட்ட துணைச் செயலாளர் துரைமுருகன் ,பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் ,பாபநாசம் ஒன்றிய செயலாளர் நாசர் திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் குமார், பேரூராட்சி கவுன்சிலர் பிரகாஷ், குமார், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகளும் சார்பணி நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதயநிதி ஸ்டாலின் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் தஞ்சை மாவட்ட முன்னாள் தலைவர் தலைவரும், அன்பில் அறக்கட்டளை உறுப்பினரும் உணவகத்தின் உரிமையாளருமான கஞ்சனூர் கண்ணன் செய்திருந்தார்.

Tags

Next Story