விழுப்புரம் மாணவியை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

விழுப்புரம் மாணவியை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர்

சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற விழுப்புரம் மாணவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து கூறினார்.

தேசிய அளவிலான சதுரங்க விளையாட்டில் பதக்கம் வென்ற சரஸ்வதி பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், சென்னையில் 67வது இந்திய பள்ளி களின் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 2023-24 கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடந்தது.

இப்போட்டியில், விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ் 1 மாணவி நித்யாஸ்ரீ இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

அவருக்கு அமைச்சர் மகேஷ் பதக்கம் வழங்கி பாராட்டினார். பதக்கம் வென்று வந்த மாணவியை, சரஸ்வதி பள்ளி தாளாளர் ராஜசேகர், பொருளாளர் சிதம்பரம், முதல்வர் யமுனா ராணி ஆகியோர் பாராட்டினர்.

Tags

Next Story