இரு தொகுதி திமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்!

இரு தொகுதி திமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்!

வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

வேலூர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களுக்கு அமைச்சர் காந்தி, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் ஜெகத்ரட்சகரும் போட்டியிடுகின்றனர். இரு வேட்பாளர்களும் அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர் துரைமுருகனுடன் இருந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி இரு வேட்பாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமார் மற்றும் முதலாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story