மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் சி.வெ.கணேசன்

மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் சி.வெ.கணேசன்
மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பாரதி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 70-வது கூட்டுறவு வார விழாவில் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மற்றும் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, மாநகர துணை மேயர் பா.தாமரைச் செல்வன், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் வே.நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story