இறகுப்பந்து போட்டியில் தங்கம்- மாணவனுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு

இறகுப்பந்து போட்டியில் தங்கம்-  மாணவனுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு

மாணவனை வாழ்த்திய அமைச்சர் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குட் பட்ட இ.பி.நகர் பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர் உதயசங்கர்- தமிழரசி தம்பதியினருக்கு பிரபு(18) என்ற மகனும் ரேஷ்மா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரபு பள்ளிகொண்டா பகுதியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும் பிரபுவிற்கு சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் அதிகம். இதனால் இறகு பந்து போன்ற விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். பின்னர் இதற்காக தனியாக கவனம் செலுத்தி பயிற்சியை மேற்கொண்டு தனியார் பள்ளி சார்பில் மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் இறகு பந்து போட்டியில் பங்கேற்று சுமார் 40க்கும் மேற்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் தற்போது ஐதரபாத்தில் இந்தியளவில் நடைபெற்ற 19 வயதுக்குபட்ட இறகு பந்து போட்டியில் தங்கம் வென்று சாதனைபடைத்தார். இதையடுத்து அவர்,பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் இது குறித்து பிரபு கூறுகையில், கடந்த 7 ஆண்டுக்கு மேலாக கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு இறகு பந்து போட்டியில் விளையாடி பல சான்றிதழ் மற்றும் பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது ஐதரபாத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தங்கம் பதக்கத்தை வென்றேன். ஒலிம்பிக்போட்டியில் இந்தியாவிற்காக விளையாடுவதே எனது லட்சியம் என கூறினார் மேலும் அமைச்சர் எ.வ.வேலு தன்னை வாழ்த்தி பாராட்டியது தனக்கு உத்வேகத்தை அளிப்பதாகவும் மாணவன் பிரபு குறிப்பிட்டார். மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், எதிரொலி மணியன், மற்றும் மாணவனின் தந்தை உதயசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story