பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு - அமைச்சர் கணேசன் அறிக்கை

பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு - அமைச்சர் கணேசன் அறிக்கை

அறிக்கை வெளியீடு

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் 16 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் "உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்", "பாசிசம் வீழட்டும் , இந்தியா வெல்லட்டும்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் மற்றும் திட்டக்குடி எம்எல்ஏ கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story