வடிகால் பணிகள் - அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைப்பு

வடிகால் பணிகள் -  அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைப்பு

வடிகால் பணிகள் துவக்கி வைப்பு

தூத்துக்குடியில் ரூ.12.90 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு சின்னக்கண்ணுபுரம் பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.90 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயகுமார், மாவட்ட உதவியாளர்கள் மணி, செந்தில், ஆல்பர்ட் வட்டச் செயலாளர் காளிதுரை வட்டப் பிரதிநிதிகள் கோவிந்த ராஜ், மீனாட்சி சுந்தரம், நடராஜன், அந்தோணி, மகேஷ், செல்வம், குமார், பாலசுப்பிரமணியன் இளைஞரணி கண்ணன், சரத்குமார், மோகன் மகளிரணி மாரி செல்வி, சுமதி, நந்தினி, சுடலி தங்கம், ஆனந்தி, செல்வி, சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story