பயணியர் நிழற்குடையை அமைச்சர் கீதாஜீவன் திறப்பு

பயணியர் நிழற்குடையை அமைச்சர் கீதாஜீவன் திறப்பு

பயணியர் நிழற்கூடை திறப்பு

தூத்துக்குடி மாவட்டம், சண்முகபுரம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் T. சண்முகபுரம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடையை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story