அங்கன்வாடிகள் மைய கட்டிடம் மற்றும் நியாய விலை கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்

அங்கன்வாடிகள் மைய கட்டிடம் மற்றும் நியாய விலை கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர், கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு.
செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம் ஊராட்சியில்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சார்பில்,ரூபாய் 130.71 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிகள் மைய கட்டிடம் மற்றும் நியாய விலை கட்டிடங்களை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் தலைமையில், குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ,காட்டாங்குளத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள். காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் , துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story