நாமக்கல்லில் புதிய வழித்தடங்களில் பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர்

நாமக்கல்லில் புதிய வழித்தடங்களில் பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர்

பேருந்து சேவையை தொடக்கி வைத்த அமைச்சர்

நாமக்கலில் போக்குவரத்துத் துறை அமைச்சர் S.S.சிவசங்கர் புதிய பேருந்து சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தின் சார்பில் கீழ்கண்ட புதிய வழித்தட பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நாமக்கல்லில் தொடங்கி வைத்தார்.

ப.வேலூர் - பொன்மலர்பாளையம், இராசிபுரம் - சிங்களாந்தபுரம் 2 நகரப் பேருந்துகளும், இராசிபுரம், கோவை, மோகனூர் கிளாம்பாக்கம், நாமக்கல் - மயிலாடுதுறை 3 புறநகர் பேருந்துகளும் நாமக்கல் மாவட்டம். வட்டார போக்குவரத்து அலுவலகம்(தெற்கு) புதிய கட்டிடம் அருகில் இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் S.S.சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.ராஜேஸ்குமார் எம்பி , மாவட்ட ஆட்சியர் உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் P.ராமலிங்கம் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் K.பொன்னுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் R.பொன்முடி அனைவரையும் வரவேற்றார். பொ.மே(சேலம்) R.சிவலிங்கம்,கோட்ட மேலாளர் M.சுரேஷ்பாபு, கிளை மேலாளர்கள் P.செங்கோட்டுவேலவன். R.மகேஷ்வரன், K.துரைசாமி மற்றும் அனைத்து தரப்பு பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story