அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

திறப்பு விழா 

ரோட்டரி சங்கம் சார்பில் சீரமைக்கப்பட்ட சங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் காந்தி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ,ஆற்காடு தெற்கு தெருவில் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 75 ஆயிரம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து தனது சொந்த செலவில் வாலாஜா சத்தார் ஷா அவுலியா தர்காவிற்கு 5 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை வீடு அமைத்து கொடுத்தார். பின்னர் வாலாஜா நகராட்சியில் ரூபாய் இரண்டு புள்ளி 98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் வளர்மதி மற்றும் ரோட்டரி சங்க தலைவர் ராமச்சந்திர உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story