மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம்: அமைச்சர் ஆய்வு

மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம்: அமைச்சர் ஆய்வு

அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை  அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் 19ம் தேதி தொடங்கியது. தூத்துக்குடி தங்கம்மாள் நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் பார்வையிட்டார். அப்போது அவர், அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு விரைவாக தமிழக முதலமைச்சர் உத்தரவு படி தீர்வு காண வேண்டும்.

பொதுமக்களை எவ்வித சீரமத்திற்கும் உள்ளாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் பொதுமக்களுக்கு உங்கள் ஒத்துழைப்பு அவசியம் பொதுமக்களும் தாங்கள் கேட்கும் ஆவணங்களை முறையாக கொடுத்து உதவுவார்கள் என்று கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story