தர்மபுரி சிப்காட்டில் அமைச்சர் ஆய்வு

தர்மபுரி புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டை பகுதியினை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் இன்று ஆய்வு செய்தார்.

தர்மபுரி புறநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளை வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இப்பகுதியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைய உள்ளது.

இப்பகுதியில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்றும் ஓசூர் சிப்காட் தொழில் பேட்டையில் தற்போது அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது. இதையடுத்து தருமபுரி சிப்காட் தொழில் பேட்டையிலும் தொழிற் சாலைகள் அதிகம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஓலா நிறுவனம் இங்கு தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிப்காட்டில் அமைய உள்ள தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கப் பெறும் வேலை வாய்ப்பு பயன்படுத்தி தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் வேகமாக வளரும் நிலை ஏற்படும். தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் தருமபுரி மாவட்டம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரன்ஸ்லி ராஜ்குமார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாநில விவசாய அணி துணைத் தலைவர் இன்பசேகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story