ஒட்டன்சத்திரம் நகராட்சி உரக்கிடங்கில் அமைச்சர் ஆய்வு

ஒட்டன்சத்திரம் நகராட்சி உரக்கிடங்கில் அமைச்சர் ஆய்வு

மரக்கன்றுகள் நட்ட அமைச்சர் 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான காப்பிலியபட்டியில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கில் மறுசுழற்சி செய்யப்படும் உலர்க் கழிவுகளை தரம்பிரிக்கும் பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கடைகள், குழந்தைவேலப்பர் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கிரிவலப்பாதை, மின் மயானம் உள்ளிட்டவைகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

Tags

Next Story