சிறுகனூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட திடலை அமைச்சர் ஆய்வு

சிறுகனூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட திடலை அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு 
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் திடலை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் தலைமை கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று சிறுகனூரில் நடைபெற உள்ளது.இதில் தமிழக முதல்வர் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தை தொடங்கி வைக்கு உள்ளார்.

இந்த பொதுக்கூட்டத் திடலை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் திருச்சி மாநகர மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story