அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் கயல்விழி

அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் கயல்விழி

அங்கன்வாடி மையம் திறப்பு

தாராபுரத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.
தாராபுரம் நகராட்சி கண்ணன் நகரில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022 - 2023 நிதியின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையக் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமை தாங்கினார். திமுக நகர அவை தலைவர் கதிரவன், திமுக நகர செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதில் நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வன், கவுன்சிலர்கள் யூசப், ஸ்ரீதரன், செலின் பிலோமினா, ஷாலினி பவர் சேகர், புனிதா சக்திவேல் மற்றும் மாவட்ட பிரதிநிதி ஐயப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் 24 வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags

Next Story