அருப்புக்கோட்டையில் அமைச்சர் தீவிர பிரசாரம்

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி சுற்று வட்டார பகுதிகளான லிங்காபுரம், அழகாபுரி, போடுரெட்டிபட்டி, பூசாரி பட்டி, சூரநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, சின்னாஞ்செட்டிபட்டி, கொப்புசித்தம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியதும்மகுண்டு, சின்னதும்மகுண்டு மற்றும் காசிலிங்காபுரம் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உடன் இணைந்து திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், விலைவாசி குறைய வேண்டும் என்றால் கை சின்னம் ஜெயிக்க வேண்டும்.‌ 10 ஆண்டுகளாக மோடி ஆட்சியில் விலைவாசி கூடிக் கொண்டே உள்ளது.‌ விலைவாசி தினசரி கூடிக் கொண்டே உள்ளது.‌ மேலே காங்கிரஸ் அமைந்து ராகுல்காந்தி பிரதமர் ஆனால் மட்டுமே விலைவாசி குறையும். காங்கிரஸ் காலத்தில் சிலிண்டர் விலை 460 ரூ மட்டுமே ஆனால் தற்போது ரூ 1200 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை குறைக்கப்படும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை 150 நாளாகவும், சம்பளம் ரூ 400 ஆகவும் உயர்த்தப்படும் என கூறி வாக்கு சேகரித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story