புதியதாக வழித்தடங்களில் பேருந்து சேவை - அமைச்சர் தொடங்கி வைத்தார்.

புதியதாக வழித்தடங்களில் பேருந்து சேவை - அமைச்சர் தொடங்கி வைத்தார்.

புதியதாக 8 வழித்தடங்களில் பேருந்து சேவைகளை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

புதியதாக 8 வழித்தடங்களில் பேருந்து சேவைகளை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலத்தின் சார்பில் வழி தட நீட்டிப்பு செய்யப்பட்ட 8 வழித்தடங்களில் பேருந்து சேவைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி முன்னிலையில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், தருமபுரி நகர்மன்ற தலைவர் மா.இலட்சுமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் டி.ஆர்.கீதாராணி, தர்மபுரி மண்டல துணை மேலாளர் (தொழில்நுட்பம்) மோகன்குமார், உதவி மேலாளர் பழனிவேல், கிளை மேலாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், போக்குவரத்து கழக தொழில் சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளனர்.

Tags

Next Story