குன்னம் அருகே திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

குன்னம் அருகே திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.38 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.38 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்தபோது, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல மக்கள் நலத்திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி, ஜல் ஜீவன் மிசன் திட்டம், பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டம் உள்ளிட்ட திட்டத்தின் கீழ், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல சிறுமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பொன்னகரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15.27 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தினையும், முருக்கன்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.17.43 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தினையும், திருமாந்துறையில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை பொதுமக்கின் பயன்பாட்டிற்கும் என மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 03 பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மொத்தம் 4.38 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கப்பட்டுள்ளது, அரசின் திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், மாவட்ட ஊராடசிக்குழு உறுப்பினர் டாக்டர் கருணாநிதி, குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story