விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் மஸ்தான் தேர்வு

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் மஸ்தான் தேர்வு

முதல்வருடன் அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்ட நிலையில் மாவட்ட அவைத்தலைவருக்கான தேர்தலில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த அமைச்சர் மஸ்தான் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு மாவட்ட அவைத் தலைவராக இருந்த சேகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவைத்தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலுக்கு செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். எனவே அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Tags

Next Story