வேட்பாளர் இல்லாமலேயே மீனவர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சர்

வேட்பாளர் இல்லாமலேயே மீனவர்களை  சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சர்

வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவுக்கு ஆதரவாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர் கிராமங்களில் வேட்பாளர் இன்றி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா போட்டியிடுகிறார் அவருக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட மீனவ கிராமங்களில் மீனவ பஞ்சாயத்தார்களை சந்தித்து வேட்பாளர் இல்லாமலேயே தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

சந்திரபாடி மீனவ கிராமத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் தொடர்ந்து தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, மாணிக்கபங்கு, புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களுக்கு சென்று திமுக அரசின் திட்டங்களை விளக்கி கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டகழக செயலாளருமான நிவேதா முருகன் மற்றும் கூட்டணி கட்சி முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story