ரூ.12.35 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

ரூ.12.35 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

சென்னிமலையில் 551 பயனாளிகளுக்கு ரூ.12.35 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
சென்னிமலையில் கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 551 பயனாளிகளுக்கு ரூ. 12.35 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.தமிழக முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறதாகவும் , கலைஞர் மக்கள் சேவை முகாம்களில் சுமார் 3245 மனுக்கள் வரப்பெற்றதில் முகாம் நடைபெற்ற அன்றே 1268 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் 551 மனுதாரர்களுக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணைகளும், இணையவழி பட்டா மாறுதல் ஆணைகளும், அமைப்பு சாரா நல வாரிய அட்டைகளும், ரூ. 12.35 கோடி மதிப்பீட்டில் மருத்துவ காப்பீட்டு அட்டைகளும் ரூ.12.35 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

Tags

Next Story