ரூ.34.70 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - துவக்கி வைத்த அமைச்சர்

ரூ.34.70 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - துவக்கி வைத்த அமைச்சர்

பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் 

ஈரோடு மாநகராட்சியில் ரூ.34.70 கோடி மதிப்பிலான சாலை பணிகளை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்திரவைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ரூ.34.70 கோடி மதிப்பீட்டில் 474 சாலை திட்டப்பணிகள் மற்றும் பொது நிதி பணிகளை துவக்கி வைத்தார். இப்பணிகள் உடனடியாக துவங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் பெரும்பகுதி இப்பணிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் விடுபட்ட பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்

Tags

Next Story