கலைத்திருவிழாவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு அமைச்சர் பாராட்டு

கலைத்திருவிழாவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு அமைச்சர் பாராட்டு

அமைச்சர் பாராட்டு

கலைத் திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாணவிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியதர்ஷினி மாநில அளவில் கலைத்திருவிழாவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவி பிரியதர்ஷினிக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் வழங்கினார்.

இதையடுத்து சாதனை மாணவிக்கு பாராட்டு விழா அஞ்செட்டி அரசு மேல்நிலைப்ள்ளியில் தலைமை ஆசிரியர் சுரேஷ் தலைமையில். ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story