நாகையில் நல திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ரகுபதி

நாகையில் நல திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ரகுபதி

நலத்திட்ட உதவிகள் 

நாகையில் 1100 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தாலிக்கு தங்கம், இலவச சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்

நாகை மாவட்டம் நாகையில் 1100பேருக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி மற்றும் 121பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தலைமை தாங்கினார் நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என் கௌதமன் முன்னிலை வைத்தார் விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் நாகை நகர் மன்ற தலைவரும் நாகை நகர திமுக செயலாளர் இரா மாரிமுத்து தலைஞாயிறு ஒன்றிய திமுக செயலாளர் மகா குமார் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் குலோத்துங்கன் தகவல் தொழில் நுட்ப அணி நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரி பாலன் நாகை நகர திமுக துணை செயலாளர் வெற்றிலைக்கடை சிவா உள்ளிட்ட ஏராளமாக கலந்து கொண்டனர்

Tags

Next Story