கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சர்

கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சர்

திறப்பு விழா 

கறம்பக்குடி அருகே வெட்டன்விடுதியில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், வெட்டன்விடுதி கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.54 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகக் கட்டிடத்தினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அகுத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ,மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை)கோ.சோமசுந்தரம், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை, அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story