மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்

 ராஜ்நாத் சிங் 

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு மதுரையில் தங்கிய நிலையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். இதனால் அவர் தங்கியிருந்த. ஓட்டலில் இருந்து,மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் வருகையை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தர்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி வழங்கப்படவில்லை. தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மீனாட்சி அம்மன் கோவிலுக்க சாமி தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக,கோவில் சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனை சாமி தரிசனம் மேற்கொள்வதற்கு முன்பாக அங்குள்ள முக்குருணி விநாயகரை தரிசனம் செய்துவிட்டு மீனாட்சி அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்தார். அங்குள்ள பொற்றாமரை குளத்தில் முன் புகைப்படம் எடுத்து கொண்டார். தொடர்ந்து அரை மணி நேர சாமி தரிசனத்திற்கு பின் மதுரை விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story