மதுரையில் முதல்வர் பிரச்சாரத்தில் பங்கேற்க அமைச்சர் வேண்டுகோள்

மதுரையில் முதல்வர் பிரச்சாரத்தில் பங்கேற்க அமைச்சர் வேண்டுகோள்

அமைச்சர் பெரிய கருப்பண்ணன்

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

மதுரையில் தமிழக முதல்வர் நாளை மறுநாள் (ஏப்.9) பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் அறிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

சிவகங்கை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து மதுரையில் நாளை மறுநாள் மதுரை ரிங் ரோட்டில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story