கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை வழங்கிய அமைச்சர் ஆர்.காந்தி.

கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை வழங்கிய அமைச்சர் ஆர்.காந்தி.

சமுதாய வளைகாப்பு 

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள சாலை கிராமத்தில் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி 200 கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தேங்காய், புடவை உள்ளிட்ட சீர்வரிசை தொகுப்பினை வழங்கினார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர் காந்தி, நமது தமிழக முதலமைச்சர் தாயுள்ளத்தோடு கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்துவது மட்டுமின்றி பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி திட்டங்களை கொண்டு வந்து அதனை செயல்படுத்தி வருகிறார். கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் சத்தான உணவுகளை உட்கொண்டு வருங்கால சந்ததிகளை நல்ல உடல் ஆரோக்கியத்தோடு பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story