சாலையை ஆய்வு செய்த அமைச்சர்

சாலையை ஆய்வு செய்த அமைச்சர்
செஞ்சியில் சாலை விரிவாக்கம் செய்வது குறித்து அமைச்சர் மஸ்தான் ஆய்வு
செஞ்சியில் சாலை விரிவாக்கம் செய்வது குறித்து அமைச்சர் மஸ்தான் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கடைவீதியில் தற்போதுள்ள சாலை இருவழிச்சாலையாக உள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, செஞ்சி பேரூராட்சி அலுவல கம் எதிரில் இருந்து நான்குமுனை சந்திப்பு வரை உள்ள சாலை யின் இருபுறமும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், அதை எப்படி விரிவாக்கம் செய்வது என்பது குறித்தும் அதிகாரிக ளுடன் அவர் ஆலோசனை நடத்தினார், ஆய்வின்போது, செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பொறியாளர் அக்பர் அலி, உதவி பொறியாளர் ஏழுமலை, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்கு மார், நகர செயலாளர் கார்த்திக் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story