குமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

குமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு  உற்சாக வரவேற்பு

குமரிக்கு வருகை தந்த அமைச்சர்


குமரிக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ஸ்ரீதர் வரவேற்றார். மேலும் குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க.வின் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story