பிரச்சார மேடை பணியினை பார்வையிட்ட அமைச்சர் வேலு

பிரச்சார மேடை  பணியினை பார்வையிட்ட அமைச்சர்  வேலு

கோவையில் நாளை மறுதினம் ஸ்டாலின், ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர் வேலு பார்வையிட்டார்.

கோவையில் நாளை மறுதினம் ஸ்டாலின், ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர் வேலு பார்வையிட்டார்.

கோவை :செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில், வருகிற 12ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி முன்னணி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இந்தியா கூட்டணி திமுக கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்,பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்ய‌ உள்ளார்கள்.

அதையொட்டி செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில் மைதானத்தில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணியினை தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.இந்த ஆய்வின்போது கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக்,தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் உட்பட உடன் இருந்தனர்.

Tags

Next Story