திருவண்ணாமலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் வாக்கு சேகரிப்பு

திமுக திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் துண்டு பிரசுரங்கள் வழங்கி கடை கடையாக வாக்கு சேகரிப்பு.....
திருவண்ணாமலை திமுக நாடாளுமன்ற வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் எதிரே பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருவண்ணாமலை திமுக நாடாளுமன்ற வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் எதிரே வியாபாரிகள் மற்றும் வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் எதிரே தொடங்கிய இந்த பிரச்சாரம் தேரடி வீதி, காந்தி சிலை, சின்னகடை வீதி, ரவுண்டானா, அறிவௌளி பூங்கா என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வேலூர் சாலையில் நிறைவு பெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் நியூட்டன் மையம் மாவட்ட செயலாளர் வளர்மதி மற்றும் தோழமைக் கட்சிகள் மதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story