எல்.முருகனை விமர்சனம் செய்த அமைச்சர்

எல்.முருகனை விமர்சனம் செய்த அமைச்சர்

கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் 

எல்.முருகன் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என்பதால் மீண்டும் மாநிலங்களவை தேரத்லில் போட்டியிடுகிறார் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் விமர்சனம் செய்தார்.

உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் , பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.இதில் தமிழக அமைச்சர்கள் முத்துசாமி , மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து உள்ளநிலையில் பேசாத சமஸ்கிருத்ததிற்கு அதிக நிதி ஒதுக்குவதாகவும் ,

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பொய்யான தகவல்களை சொல்லி வருவதாக தெரிவித்தார்.மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என்பதால் மீண்டும் மாநிலங்களவை தேரத்லில் போட்டியிடுகிறார் என்றார்.

Tags

Next Story