திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கிய அமைச்சர்!

திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கிய அமைச்சர்!

 அரிமளம் ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் ரகுபதி வழங்கினார். 

அரிமளம் ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், சி.வி.ஆர். திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி.க.ந.கோகுலப்பிரியா, அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், வீட்டுவசதி வாரிய உறுப்பினர் திரு.இளையராஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story