திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர்

திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர்

தண்ணீர் பந்தல் திறப்பு

புதுக்கோட்டையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் முன்பு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர், சர்பத், குளிர்பானங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதேபோன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதன் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தலையும் அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் கே கே செல்லபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் திரு எம் எம் அப்துல்லா, வடக்கு மாவட்ட அவை தலைவர் திரு. அரு. வீரமணி அவர்கள், மாநகரக் கழக செயலாளர் அண்ணன் ஆ.செந்தில் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கவிச்சுடர் கவிதை பித்தன் அவர்கள், கழக விவசாய அணி துணைத் தலைவர் அண்ணன் திரு சந்திரசேகர், மாநகர துணை மேயர் திரு.லியாகத்அலி, ஒன்றிய செயலாளர்கள் திரு.மு க ராமகிருஷ்ணன், திரு.தவ. பாஞ்சாலன், திரு. சாமிநாதன் அவர்கள், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு சண்முகம், கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகள், அனைத்து அணிகளை சார்ந்த மாவட்ட அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story