நெல்லையில் நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர்

நெல்லையில் நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர்

நிவாரண பொருட்கள்  வழங்கிய அமைச்சர் 

நெல்லையில் நடந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் 2000 குடும்பங்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிவாரண பொருள் தொகுப்புகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் ஜங்ஷனில் அமைந்துள்ள லட்சுமி நாராயணன் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சியின் ஏற்பாட்டில் 2000 குடும்பங்களுக்கு 15 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை சபாநாயகர் அப்பாவு தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான், மாவட்ட ஊராட்சி தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story