நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

புதுக்கோட்டை அருகே கத்தகுறிச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கத்தகுறிச்சியில் மக்கள் பயன்பாட்டிற்கான நெல் சுத்தம் செய்யும் இயந்திரம். மற்றும் மரக்கன்று நட்டு, 500 க்கும் மேற்பட்டமக்களுக்கு பொருட்களுடன், பாத்திரங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் ராணுவ நலன்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் திருவரங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் வள்ளியம்மை தங்கமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் அருன் வடிவேல், சுற்றுச்சூழல் அணி வீரச்செல்வம், கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story