அறக்கட்டளை ஆண்டு விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கிய  அமைச்சர்

அறக்கட்டளை ஆண்டு விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கிய  அமைச்சர்

அறக்கட்டளை ஆண்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய  அமைச்சர்

மருத்துவம் மற்றும் கல்வி உதவி தொகைகள் வழங்கப்பட்டன
குமரி மாவட்டம் குலசேகரம், செருப்பாலூர் பகுதியில் தரிசனம் அறக்கட்டளை செயல்படுகிறது. இதன் 14 வது ஆண்டு விழா மற்றும் குடும்ப விழா கல்லடிமாமூடு இயேசு மரியா திருஇருதய ஆலய வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் சாம்ராஜ் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஜாண் முன்னிலை வகித்தார். அமைச்சர் மனோதங்கராஜ் நல திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜான்சன் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 70 பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொகை, சீருடை வழங்கப்பட்டது. 118 பேருக்கு சேலை, ₹10 ஆயிரம் வீதம் 10 பேருக்கு மருத்துவ உதவி தொகை என சுமார் ₹5 லட்சம் மதிப்பில் 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ₹50 ஆயிரத்துக்கான காசோலையை தொழிலதிபர் ஜாண் அமைச்சர் மனோதங்கராஜிடம் வழங்கினார்.

Tags

Next Story